தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோரத்தாண்டவம் ஆடிய டானா புயல்.. மேற்கு வங்கத்தில் 4 பேர் உயிரிழப்பு!

டானா புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டானா புயல் தொடர்பான புகைப்படம்
டானா புயல் தொடர்பான புகைப்படம் (credits - PTI)

By PTI

Published : 5 hours ago

புவனேஸ்வர்: வங்கக்கடலில் உருவான டானா புயல் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பயங்கர தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு கரையைக் கடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை புயல் கரையைக் கடக்கும் முன்பு 12.05 மணியளவில், கேந்திரபாராவில் உள்ள பிதர்கனிகா மற்றும் தாம்ரா இடையே மணிக்கு 110 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது.

அதிக காற்று, கனமழை மற்றும் மோசமான கடல் அலைகள் காரணமாக, ஒடிசாவின் கடலோரப் பகுதிகள் பயங்கர சேதத்தைச் சந்தித்தன. டானா புயலின் கோர தாண்டவத்தால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. குறிப்பாக, ஒடிசாவின் கேந்திரபாரா, பத்ரக் மற்றும் பாலசோர் ஆகிய இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 100 கிமீ வேகத்தில் வீசியது.

இதனால், ஆக்ரோஷமான கடல் அலைகள் 2 மீட்டர் உயரத்துக்கு ஆர்ப்பரித்து பிதர்கனிகா தேசிய பூங்காவிற்கு அருகே உள்ள பகுதிகளை மூழ்கடித்தது. பின்னர், வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியளவில் மேற்கு வங்கம் - ஒடிசா இடையே புயல் கரையைக் கடந்தது. இதனால், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்கட்டமைப்பு மற்றும் பயிர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஒடிசா அடிக்கடி புயலுக்கு இலக்காவது ஏன்? காரணங்களை விளக்கும் வல்லுநர்கள்!

உயிரிழப்புகள்:டானா புயலால் மேற்கு வங்கத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள பட் பட் என்ற இடத்தில் இருக்கும் மின் கம்பியை தொட்டதில் சந்தன் தாஸ் (31) என்ற தன்னார்வலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் போலீஸ் குழுவுடன் வெளியே சென்றபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஹவுரா நகராட்சி ஊழியர் ஒருவர் தண்டிப்பாராவில் தண்ணீர் தேங்கிய சாலையில் இறந்து கிடந்துள்ளார். அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. முன்னதாக, நேற்று மேற்கு வங்கத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பதர்பிரதிமாவில் ஒருவரும், தெற்கு கொல்கத்தாவின் பபானிபூர் பகுதியில் மற்றொருவரும் உயிரிழந்துள்ளனர். இதனால் கொல்கத்தாவில் டானா புயல் இறப்பு எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. மேலும், ஒடிசாவின் பத்ரக், பாலசோர், கியோஞ்சர் மற்றும் மயூர்பஞ்ச் மாவட்டங்களுக்கு இன்று காலை வரை வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details