தமிழ்நாடு

tamil nadu

ஆஷாட நவராத்திரி விழா 2024; வாராஹி அம்மனுக்கு மாதுளை முத்துக்கள் அலங்காரம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 10:32 PM IST

Amman
ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் (Credits - ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலில் தனி சன்னதியில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில், மஹா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி பெருவிழா தஞ்சை பெரிய கோயிலில் கடந்த ஜூலை 5ஆம் தேதி தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் நடைபெறும். அந்த வகையில், ஆறாம் நாளான இன்று ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு மாதுளை முத்துக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details