தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை மக்களவைத் தொகுதியில் 64.42% வாக்குப்பதிவு..சூலூரில் அதிகபட்சமாக 75.33% வாக்குகள் பதிவு! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

lok sabha election 2024: விறுவிறுப்பாக நடந்து முடிந்த கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் 64.42 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக மற்ற தொகுதிகளை விட சூலூர் சட்டமன்ற தொகுதியில் 75.33 சதவிகித வாக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Coimbatore Lok Sabha Election voting in lok sabha election 2024
கோவை மக்களவைத் தொகுதி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 20, 2024, 9:27 AM IST

கோயம்புத்தூர்:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. அதில், கோவை நாடாளுமன்றத் தொகுதியானது, கோயம்புத்தூர் வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், சூலூர், கவுண்டம்பாளையம் மற்றும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.

கோவை நாடாளுமன்றத் தொகுதியில், 10 லட்சத்து 41 ஆயிரத்து 349 ஆண் வாக்காளர்கள், 10 லட்சத்து 64 ஆயிரத்து 394 பெண் வாக்காளர்கள் மற்றும் 381 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 21லட்சத்து 6 ஆயிரத்து 124 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு, திமுக, அதிமுக, பாஜக மற்றும் 26 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 37 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

கோவை மக்களவை தொகுதியில் 582 மையங்களில் 2 ஆயிரத்து 59 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய நிலையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். குறிப்பாக, நகர்ப்புறங்களை விட கிராமப்புற வாக்காளர்கள், வாக்களிப்பதில் அதிக ஆர்வம் காட்டினர். இதனால் கிராமப்புறங்களில் வாக்குப்பதிவு அதிகரித்து காணப்பட்டது.

கோவை மக்களவைத் தொகுதியில் பதிவாக வாக்குகளின் சதவீதம்

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கிய மாலையுடன் நிறைவடைந்த நிலையில், கோவை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 64.42 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

வ.எண்தொகுதிகளின் பெயர்வாக்குகளின் எண்ணிக்கை (%)
1. கோவை வடக்கு 58.74 %
2. கோவை தெற்கு 59.25 %
3. சிங்காநல்லூர் 59.33 %
4. கவுண்டம்பாளையம் 66.42%
5. பல்லடம் 67.42%
6. சூலூர் 75.33 %

இதனையடுத்து, பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் எனப்படும் இருட்டு அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கும் பணி துவங்கியது.

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் பல்வேறு மலைக்கிராமங்கள் இருப்பதாலும், தொலைதூரத்தில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்து கொண்டிருப்பதாலும் இன்றும் (சனிக்கிழமை) வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசினர் தொழில்நுட்ப கல்லூரிக்கு கொண்டுவரப்பட உள்ளன.

பின்னர் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டு சீல் வைக்கும் பணி துவங்க உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கல்லூரியில் வைக்கப்படுவதை ஒட்டி 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க:நிறைவடைந்தது வாக்குப்பதிவு.. தமிழகத்தில் சில முக்கிய நிகழ்வுகள் குறித்து ரவுண்டாஃப்! - Tamil Nadu Polling Roundup

ABOUT THE AUTHOR

...view details