தமிழ்நாடு

tamil nadu

17 துண்டுகளாக வெட்டி இளைஞர் படுகொலை! சவுதி - சத்தீஸ்கர்.. கொலைக்கான பின்னணி என்ன? - Chhattisgarh man chopped 17 pieces

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 1:42 PM IST

சவுதி நாட்டவர் சத்தீஸ்கரில் 17 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Chhattisgarh Man's Body Found Chopped Into 17 Pieces In Korba (ETV Bharat)

கோர்பா:சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டம் பந்தபரா கிராமத்தில் ஒருவரது சடலம் கிடப்பதாக போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சாக்கு மற்றும் பள்ளி பையில் 17 துண்டுகளாக வெட்டப்பட்டு கிடந்த ஒருவரது சடலத்தை கைப்பற்றினர்.

மேலும் சடலத்தின் அருகே கிடைந்த பாஸ்போர்ட்டை கைப்பற்றிய போலீசார் கொல்லப்பட்டது முகமது வாசிம் அன்சாரி என கண்டறிந்தனர். போலீசாரின் விசாரணையில் 28 வயதான முகமது வாசின் அன்சாரி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் என கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, முகமது வாசிம் அன்சாரியின் குடும்பத்தினரை தொடர்பு கொண்ட போலீசார், அவர்களை வரவழைத்து உடலை அடையாளம் காணச் செய்தனர். மேலும், வாசிம் அன்சாரியின் குடும்பத்தினர் கொடுத்த தகவல்கள் போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முகமது வாசின் அன்சாரி கடந்த இரண்டரை ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்ததாக குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக முகமது வாசிம் அன்சாரி சவுதி அரேபியாவுக்கு பணிக்காக சென்றதாகவும் அவர் நாடு திரும்புவது குறித்து இதுவரை தெரிவிக்கவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வேலைக்காக சவுதி சென்றது முதல் முகமது வாசிம் அன்சாரியுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் இருப்பினும் அவர் குடும்பத்தினருடன் பேசுவதை குறைத்துக் கொண்டே வந்ததாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.

சொந்த ஊர் திரும்புவது குறித்து எந்த தகவலையும் முகமது வாசிம் அன்சாரி தங்களிடம் தெரிவிக்கவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டரை ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் இருந்த நபர் குடும்பத்தினரிடம் சொல்லாமல் நாடு திரும்பியது ஏன்? நாடு திரும்பியவருக்கு என்னவாயிற்று? என்ன காரணத்திற்காக 17 துண்டுகளாக வெட்டப்பட்டு கொல்லப்பட்டார்? என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக சிலரை பிடித்து காவலில் எடுத்து விசாரித்து வருவதாகவும் மேலும் சிலரை வலைவீசி தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய ஸ்ரத்தா வாக்கர் கொலைக்கு பின்னர் மீண்டும் ஒருவர் பல்வேறு துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்டு உள்ளார்.

கொலைக்கான காரணம் என்னவென தெரிய வராத நிலையில், 17 துண்டுகளாக ஒருவரை வெட்டிக் கொல்லும் அளவுக்கு என்ன நேர்ந்தது என்ற மர்மம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கர் சர்ச்சை: ஒரு நபர் ஆணையம் விசாரிக்க மத்திய அரசு உத்தரவு! - IAS Officer Puja Khedkar

ABOUT THE AUTHOR

...view details