தமிழ்நாடு

tamil nadu

ஷிரூர் மலைச்சரிவு; மீட்புப் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர்.. விரைந்த இராணுவம்! - Shirur landslide

Shirur landslide tragedy: கர்நாடக மாநிலம் ஷிரூர் பகுதியில் நட்ந்த நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா ஆய்வு மேற்கொண்டார். மேலும், மத்திய அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் மீட்புப் பணிக்காக இராணுவத்தினர் விரைந்தனர்.

By PTI

Published : Jul 21, 2024, 8:39 PM IST

Published : Jul 21, 2024, 8:39 PM IST

மீட்பு பணிகளை ஆய்வு செய்த சித்தராமையா
மீட்புப் பணிகளை ஆய்வு செய்த சித்தராமையா (Credits - ETV Bharat Tamil Nadu)

உத்தர கன்னடா (கர்நாடகா):கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள அங்கோலா அடுத்த ஷிரூர் பகுதியில் கடந்த வாரம் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் காணாமல் போனதாகக் கூறப்படும் நிலையில், தற்போது வரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோகர்ணாவுக்கு அடுத்துள்ள கங்கேகோலா பகுதியைச் சேர்ந்த லோகேஷ் எனபவர் கடந்த 5 நாட்களாக காணாமல் போனதாகக் கூறி, அவரது தாயார் மாதேவி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், அவர் இந்த நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து அவரது தாய் அளித்த புகாரில், அவரது மகன் கோவாவில் படகு சவாரி செய்யும் தொழில் செய்து வந்ததாகவும், சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், பின்னர் விடுப்பு எடுத்துக் கொண்டு நிலச்சரிவு நிகழ்ந்த தினத்தன்று கிளம்பியதாகவும், இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த ஜூலை 16ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக, ஷிரூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய 7 பேர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும், தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் நேரில் ஆய்வு:இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதலமைச்சர் சித்தராமையா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் கிருஷ்ண பைரே கவுடா, மங்களா வைத்யா, சதீஷ் ஜாரகிஹோலி ஆகியோரும் இருந்தனர்.

மீட்புப் பணிக்கு விரைந்த இராணுவம்:நிலச்சரிவில் சிக்கியுள்ளதாகக் கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநரை மீட்பதில் தாமதம் ஏற்படுவதாக அவரது குடும்பத்தினர் பிரதமர் அலுலகத்திற்கு புகார் தெரிவித்தனர். அதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு இராணுவத்தை அனுப்ப வேண்டி உள்துறை அமித்ஷா உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், பெலகாவி பகுதியைச் சேர்ந்த மேஜர் அபிஷேக் தலைமையிலான இராணுவப் படையினர் 44 வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:கேரளாவில் நிபா வைரஸ்க்கு மாணவர் உயிரிழப்பு! 246 பேர் தனிமைப்படுத்தி சிகிச்சை!

ABOUT THE AUTHOR

...view details