தமிழ்நாடு

tamil nadu

விஜயின் பன்ச் டயலாக்கை வைத்து இங்கிலாந்தை கலாய்த்த இலங்கை வீரர்

By

Published : Jun 22, 2019, 8:57 PM IST

நடிகர் விஜயின் பிரபல பன்ச் டயலாக்கை பயன்படுத்தி இலங்கை முன்னாள் வீரர் ரஸல் அர்னால்டு, இங்கிலாந்து அணியை கலாய்த்த சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

விஜயின் பன்ச் டயலாக்கை வைத்து இங்கிலாந்தை கலாய்த்த இலங்கை வீரர்

நடிகர் விஜய் இன்று தனது 45ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். விஜய் பிறந்தநாள் ஸ்பெசலாக அட்லி இயக்கத்தில் அவர் நடித்துவரும் ’பிகில்’ திரைப்படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.விஜய்க்கு கடல்தாண்டி பல்வேறு நாடுகளில் ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே.

அந்தவகையில், இலங்கை அணியின் முன்னாள் வீரரான ரஸல் அர்னால்டும் விஜயின் ரசிகராக இருக்கிறார். ரஸல் தனது ட்விட்டர் பக்கத்தில், விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், ’பிகில்’ திரைப்பட போஸ்டர்கள் தெறிக்கும் விதமாக இருப்பதாகவும், திரைப்படத்தின் ரீலிஸுக்காக காத்திருக்க முடியாது எனவும் பதிவிட்டுள்ளார்.

அதேசமயம், நேற்றைய உலகக்கோப்பை போட்டியில், இலங்கை அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியே வெற்றிபெறும் என இலங்கை அணியை ஏளனமாக நினைத்தவர்களுக்கு, இலங்கை அணி ஷாக் கொடுத்தது.

இதையடுத்து, அவர் விஜயின் ’போக்கிரி’ பட பன்ச் டயலாக்கை பயன்படுத்தி இங்கிலாந்து அணியை கலாய்த்துள்ளார். அதில், டேய் மோர்கன் எப்போ வந்தோம் ங்கறது முக்கியம் இல்ல டா, புல்லட் எப்டி எறங்குது ங்கறது தான் முக்கியம் என்ற வசனத்தையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.தற்போது இவரது ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details