சென்னை:அம்பத்தூரில் இருந்து அயப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. அப்போது சாலையோரம் இருந்த செருப்பு தைக்கும் கடை மீது பாய்ந்த கார், அங்கிருந்த கம்பத்தில் மோதி நின்றது.
Published : 8 hours ago
திடீரென பாய்ந்த கார்.. நூழிலையில் தப்பிய செருப்பு தைக்கும் தொழிலாளி!
சென்னையில் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளான கார் (Credits - ETV Bharat Tamil Nadu)
இந்த விபத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி காயமடைந்த நிலையில், கம்பம் தடுத்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனிடையே, மதுபோதையில் வாகனத்தை இயக்கிய ஓட்டுநர் வெங்கடராமன், தப்பி ஓடிய மற்றொரு போதை ஆசாமி ஆகிய இருவரையும் பொதுமக்கள் விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.