தமிழ்நாடு

tamil nadu

மருத்துவமனைக்கும் காவல் நிலையத்திற்கும் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்; வேலூரில் பரபரப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 12, 2024, 12:08 PM IST

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தோஷ் குமார்
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சந்தோஷ் குமார் (Credits - ETV Bharat Tamil Nadu)

வேலூர்:வேலூர் பாகாயம் பகுதியில் உள்ள சி.எம்.சி மருத்துவமனை மற்றும் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், வெடிகுண்டு மாலை 5 மணிக்கு வெடிக்கும் எனவும் நேற்று காவல்துறைக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

பின்னர் அந்த மிரட்டல் வந்த செல்ஃபோன் எண்ணை டிராக் செய்து, அந்த நபரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பதும், அவர் வேலூரில் இருந்ததும் தெரிந்தது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சற்று மனநலம் பாதித்த நிலையில் இருந்த சந்தோஷ் குமார் நேற்று பாகாயம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மனநல ஆலோசனைக்காக பேருந்தில் அவரது தம்பி தமிழ்ச்செல்வனுடன் வந்துள்ளார். அப்போது தனது தம்பியின் செல்ஃபோனை வாங்கி, பாகாயம் காவல் நிலையத்திற்கும், சிகிச்சை பெறவந்த சி.எம்.சி மனநல மருத்துவமனைக்கும் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை காவல்துறையினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details