ETV Bharat / state

திண்டுக்கல்லில் 17 வயது சிறுமி மீது துப்பாக்கி சூடு.. காதலன் வெறிச்செயல்..! பகீர் பின்னணி..! - dindigul gun shot

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 1:34 PM IST

dindigul lovers issue: நத்தம் அருகே காதல் விவகாரத்தில் 17 வயது சிறுமியை ஏர் ரைபிள் துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

17 வயது சிறுமி மீது துப்பாக்கி சூடு
17 வயது சிறுமி மீது துப்பாக்கி சூடு (credit - ETV Bharat Tamil Nadu)

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே 17 வயது சிறுமியை கொட்டாம்பட்டி அருகே உள்ள 19 வயதான இளைஞர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று துவராபதியில் உள்ள உறவினரின் வீட்டில் நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சிக்காக வந்த இளைஞர், காதலியை (சிறுமியை) துவராபதி பகுதியில் உள்ள சித்தப்பா வீட்டில் தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது இளைஞருக்கும், வேறு ஒரு பெண்ணிற்கும் தொடர்பு இருப்பதாக கூறி காதலி காதலனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.

இதில் ஆத்திரமடைந்த இளைஞர் அவரது சித்தப்பா வீட்டில் இருந்த காற்று துப்பாக்கியால் (AIR GUN) காதலியை சுட்டார். இதில் 17 வயது சிறுமிக்கு மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காதலியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை பார்த்த இளைஞர் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் திண்டுக்கல் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் ஊரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் விசாரணை செய்து வருகிறார். மேலும், இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: திருப்பூரில் பயங்கரம்..! மாமனாரை சுட்டுக்கொன்ற மருமகன் தானும் தற்கொலை - காரணம் என்ன?

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே 17 வயது சிறுமியை கொட்டாம்பட்டி அருகே உள்ள 19 வயதான இளைஞர் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று துவராபதியில் உள்ள உறவினரின் வீட்டில் நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சிக்காக வந்த இளைஞர், காதலியை (சிறுமியை) துவராபதி பகுதியில் உள்ள சித்தப்பா வீட்டில் தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது இளைஞருக்கும், வேறு ஒரு பெண்ணிற்கும் தொடர்பு இருப்பதாக கூறி காதலி காதலனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.

இதில் ஆத்திரமடைந்த இளைஞர் அவரது சித்தப்பா வீட்டில் இருந்த காற்று துப்பாக்கியால் (AIR GUN) காதலியை சுட்டார். இதில் 17 வயது சிறுமிக்கு மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். காதலியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை பார்த்த இளைஞர் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் திண்டுக்கல் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் ஊரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் விசாரணை செய்து வருகிறார். மேலும், இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: திருப்பூரில் பயங்கரம்..! மாமனாரை சுட்டுக்கொன்ற மருமகன் தானும் தற்கொலை - காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.