ETV Bharat / state

தாய்க்கு பாலியல் தொல்லை: சித்தி படுகொலை.. சித்தப்பாவை வெட்டிய இளைஞர் கைது! - WOMEN MURDER CASE IN TIRUPATHUR

திருப்பத்தூரில் தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனது சித்தப்பாவை இளைஞர் வெட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2025, 11:09 PM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் இளைஞர் ஒருவர் தனது தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சித்தப்பாவை வெட்டிகொலை செய்ய முற்பட்டபோது, சித்தி இடையில் வந்து வழிமறித்து படுகாயங்களை ஏற்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இச்சம்வத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களையும் திருப்பத்தூர் கிராமிய போலீசார் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ள திமுக நிர்வாகியின் வீட்டிற்குள் புகுந்த நபர்கள், அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். தொடர்ந்து, இதனை தடுக்க வந்த அவரது மனைவி மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், அவரது மனைவி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி கொண்டிருந்த திமுக நிர்வாகியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர், மேல்சிகிச்சைகாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, அங்கிருந்து ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் 3 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஏலகிரியை உலுக்கிய மூதாட்டி கொலை... தனிமையில் இருந்த காந்தாவுக்கு என்ன நடந்தது? போலீசார் விசாரணை!

விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள், ஜோலார்பேட்டை ரயில்வை ஜங்ஷன் பகுதியில் இருசக்கர வாகனத்தை விட்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, போலீசார் ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்ததில் இரண்டு இளைஞர்களை வாணியம்பாடி நகராட்சி அருகே இறக்கி விட்டதாக தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதில், உயிரிழந்த பெண்ணின் அக்கா மகன் மற்றும் அவரது நண்பர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, இரண்டு இளைஞர்களையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

போலீசார் விசாரணையில், உயிரிழந்த பெண்ணின் அக்காவின் கணவர் மாற்றுத்திறனாளியாக இருந்துள்ளார். இதனால், அப்பெண்ணின் அக்காவிற்கு பெண்ணின் கணவரான திமுக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண், இது குறித்து தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.

இதனால், மகன் நண்பருடன் சேர்ந்து சித்தப்பாவிடம் இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என கூறியுள்ளனர். இதில், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதால் சித்தப்பாவை வெட்டியுள்ளனர். இதனை தடுக்க வந்த சித்தியையும் வெட்டியுள்ளனர் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, திருப்பத்தூர் கிராமிய போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் இளைஞர் ஒருவர் தனது தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சித்தப்பாவை வெட்டிகொலை செய்ய முற்பட்டபோது, சித்தி இடையில் வந்து வழிமறித்து படுகாயங்களை ஏற்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இச்சம்வத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களையும் திருப்பத்தூர் கிராமிய போலீசார் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ள திமுக நிர்வாகியின் வீட்டிற்குள் புகுந்த நபர்கள், அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். தொடர்ந்து, இதனை தடுக்க வந்த அவரது மனைவி மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், அவரது மனைவி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி கொண்டிருந்த திமுக நிர்வாகியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர், மேல்சிகிச்சைகாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, அங்கிருந்து ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர், உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் 3 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.

இதையும் படிங்க: ஏலகிரியை உலுக்கிய மூதாட்டி கொலை... தனிமையில் இருந்த காந்தாவுக்கு என்ன நடந்தது? போலீசார் விசாரணை!

விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள், ஜோலார்பேட்டை ரயில்வை ஜங்ஷன் பகுதியில் இருசக்கர வாகனத்தை விட்டு அங்கிருந்து ஆட்டோவில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, போலீசார் ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்ததில் இரண்டு இளைஞர்களை வாணியம்பாடி நகராட்சி அருகே இறக்கி விட்டதாக தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதில், உயிரிழந்த பெண்ணின் அக்கா மகன் மற்றும் அவரது நண்பர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, இரண்டு இளைஞர்களையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

போலீசார் விசாரணையில், உயிரிழந்த பெண்ணின் அக்காவின் கணவர் மாற்றுத்திறனாளியாக இருந்துள்ளார். இதனால், அப்பெண்ணின் அக்காவிற்கு பெண்ணின் கணவரான திமுக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண், இது குறித்து தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.

இதனால், மகன் நண்பருடன் சேர்ந்து சித்தப்பாவிடம் இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என கூறியுள்ளனர். இதில், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதால் சித்தப்பாவை வெட்டியுள்ளனர். இதனை தடுக்க வந்த சித்தியையும் வெட்டியுள்ளனர் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து, திருப்பத்தூர் கிராமிய போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.