சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வளாகத்தின் உள்ளேயும், வெளியேயும் ஒன்றுகூடி பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அப்போது, காலை 10 மணிக்கு மேல் தண்ணீர் குடிக்கவும், கழிவறைக்குச் செல்லவும் மாணவர்களுக்கு நிர்வாகம் தடைவிதிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும், அனைத்து பிளாக்குகளிலும் கழிவறை வசதி செய்து தர வேண்டும். குறிப்பாக விடுதிக் கட்டணத்தை குறைத்து சத்தான உணவு வழங்கிடவும், சேதமடைந்த கட்டடங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட கல்லூரியில் அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென பல கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் ஜனநாயகத்தைப் பறிப்பதாகவும், அடிப்படை வசதியின்றி கல்வி கற்றும் சூழல் உள்ளதாகவும், பழமையான கல்லூரியாக இருந்தபோதும் சுகாதாரமற்ற சூழல் உள்ளதாகவும், இதுதொடர்பாக நிர்வாகத்திடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.