தமிழ்நாடு

tamil nadu

சென்னை - நாகர்கோவில் சுதந்திர தின சிறப்பு ரயில்.. முன்பதிவு தொடங்கியது! - INDEPENDENCE DAY SPECIAL TRAINS

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 14, 2024, 6:16 PM IST

INDEPENDENCE DAY SPECIAL TRAINS: சுதந்திர தின விடுமுறை கால கூட்ட நெரிசலைச் சமாளிப்பதற்காக இன்றும், நாளையும் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே குளிர்சாதன சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில் கோப்புப் படம்
சிறப்பு ரயில் கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை:சுதந்திர தின விடுமுறை கால கூட்ட நெரிசலைச் சமாளிக்க விழுப்புரம் வழியாக டாக்டர்.எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே ஒரு குளிர்சாதன சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் சிறப்பு ரயில் (06055) சென்னையிலிருந்து இன்று (ஆகஸ்ட் 14) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, நாளை மதியம் 12.30 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

அதேபோல், மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - சென்னை ஆவடி சிறப்பு ரயில் (06056) நாகர்கோவிலில் இருந்து நாளை (ஆகஸ்ட் 15) மாலை 03.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.10 மணிக்கு சென்னை ஆவடி வந்தடையும். இந்த ரயில்கள் அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதில் 14 குறைந்த கட்டண குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகளும், இரண்டு சரக்குப் பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்பட உள்ளன. இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஒக்கியம் மடுவு பாலம் நீர்வழிப்பாதை; சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details