பெங்களூரு:நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தது இந்திய அணி. இதனை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 10 விக்கெட் இழப்பிற்கு 402 ரன்கள் குவித்தது.இதனால் 356 ரன்கள் முன்னிலை பெற்றது நியூசிலாந்து. இதனை தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி. இதில் ஜெஸ்வால் 35ரன், கேப்டன் ரோகித் சர்மா 52, விராட் கோலி 70 ரன்களுக்கு விக்கெட் இழந்து வெளியேறினர்.
முதல் சதம்:இந்திய அணி சர்பராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில், சர்ஃபராஸ் கான் 110 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்து சாதனை படைத்தார். 96 ரன்கள் எடுத்திருந்த போது பவுண்டரி அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் மெய்டன் சதம் விளாசினார்.
இதன் மூலமாக ஒரே போட்டியில் டக் அவுட் மற்றும் சதம் அடித்து சாதனை படைத்தவர்களின் பட்டியலில் சர்ஃபராஸ் கான் இடம் பிடித்துள்ளார். இந்த போட்டியில் 195 பந்துகளை எதிர்கொண்ட அவர் 18 பவுண்டரி 3 சிக்ஸர்கள் உள்பட 150 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் விக்கெட் இழந்து வெளியேறினார்.
இதையும் படிங்க:மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி; நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதல்!
சாதனை படைத்த சர்பராஸ் கான்:முதல் தர கிரிக்கெட்டி முத்திரை பதித்தவர்களுக்கு மட்டுமே இந்திய அணியில் இடம் கிடைக்கும். ஆனால் சர்பராஸ் காரனுக்கு மட்டுமே ஏனோ அது உடனடியாக நடக்கவில்லை. காரணம் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் 2019 மற்றும் 2020 காலகட்டத்தில் சீசனில் அவரது ஆவரேஜ் 150+ , 2021-22 சீசனில் அவருடைய ஆவரேஜ் 120+, 2022-23 சீசனில் அவருடைய ஆவரேஜ் 92. இப்படி இருந்தும் இந்திய அணிக்கான அந்த 3 ஆண்டுகளில் அவருக்கு வரவே இல்லை.