ETV Bharat / sports

2025 ஐபிஎல் தொடரிலும் CSK-வில் தோனி? - சிஇஓ விஸ்வநாதன் கூறியது என்ன?

அடுத்த ஆண்டு(2025) ஐபிஎல் போட்டியில் தோனி சிஎஸ்கே அணியில் விளையாடுவாரா என்பது குறித்து தோனி அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன் கூறுகிறேன் என தெரிவித்துள்ளார் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ கே.எஸ் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

சிஎஸ்கே அணியின் சிஇஓ கே.எஸ் விஸ்வநாதன்
சிஎஸ்கே அணியின் சிஇஓ கே.எஸ் விஸ்வநாதன் (Credits- ETV Bharat Tamil Nadu)

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் 27வது பரிசளிப்பு விழா திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது. அந்த பரிசளிப்பு விழா திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் சிவ சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிலையில் சிறப்பு விருந்தினராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ கே.எஸ் விஸ்வநாதன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கிரிக்கெட் அணிக்கு மற்றும் வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சிஎஸ்கே அணியில் தோனி விளையாட வேண்டும் என்று எங்களுக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் அது குறித்து இன்னும் அவர் எங்களிடம் கூறவில்லை. அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்னதாக கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் சிஇஓ கே.எஸ் விஸ்வநாதன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

எங்களுக்கும் அவர் சிஎஸ்கேவில் ஆட வேண்டும் என்கிற ஆசையும் நம்பிக்கையும் இருக்கிறது. அன்கேப்டு பிளேயர்ஸ் (Uncapped Players) தோனிக்காக கொண்டு வரவில்லை. இது முதல் வருடத்தில் இருந்தே இருக்கிறது. அன்கேப்டு பிளேயர்ஸில் ஆறு முதல் ஏழு வீரர்கள் வரை அணிக்குள் வர இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: "ஆர்சிபிக்கு அவரை இழுக்க ரூ.20 கோடி வேணும்"- அஸ்வினின் பேச்சால் மீண்டும் சூடுபிடிப்பு!

சிஎஸ்கே அணியில் யார் யார் விளையாடுவார்கள் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. ஏலத்திற்கு பின்னரே அது தெரிய வரும்” என்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் துணைச் செயலாளர் பாபா, திருவாரூர் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்ட செயலாளர் பசுபதி, உள்ளிட்ட கிரிக்கெட் அணியினர், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் 27வது பரிசளிப்பு விழா திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது. அந்த பரிசளிப்பு விழா திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் சிவ சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிலையில் சிறப்பு விருந்தினராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ கே.எஸ் விஸ்வநாதன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கிரிக்கெட் அணிக்கு மற்றும் வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சிஎஸ்கே அணியில் தோனி விளையாட வேண்டும் என்று எங்களுக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் அது குறித்து இன்னும் அவர் எங்களிடம் கூறவில்லை. அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்னதாக கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் சிஇஓ கே.எஸ் விஸ்வநாதன் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu)

எங்களுக்கும் அவர் சிஎஸ்கேவில் ஆட வேண்டும் என்கிற ஆசையும் நம்பிக்கையும் இருக்கிறது. அன்கேப்டு பிளேயர்ஸ் (Uncapped Players) தோனிக்காக கொண்டு வரவில்லை. இது முதல் வருடத்தில் இருந்தே இருக்கிறது. அன்கேப்டு பிளேயர்ஸில் ஆறு முதல் ஏழு வீரர்கள் வரை அணிக்குள் வர இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: "ஆர்சிபிக்கு அவரை இழுக்க ரூ.20 கோடி வேணும்"- அஸ்வினின் பேச்சால் மீண்டும் சூடுபிடிப்பு!

சிஎஸ்கே அணியில் யார் யார் விளையாடுவார்கள் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. ஏலத்திற்கு பின்னரே அது தெரிய வரும்” என்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் துணைச் செயலாளர் பாபா, திருவாரூர் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்ட செயலாளர் பசுபதி, உள்ளிட்ட கிரிக்கெட் அணியினர், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.