தமிழ்நாடு

tamil nadu

பாரீஸ் ஒலிம்பிக் 2024: 5வது நாளில் யார் யாருக்கு போட்டிகள்! முழு விபரம்! - Paris Olympics 2024

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 31, 2024, 12:16 AM IST

பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழாவில் இன்று 5வது நாள் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை, பேட்மிண்டன், குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகள் குறித்து இந்த செய்தியில் காணலாம்...

Etv Bharat
Paris Olympics 2024 Day 5 India Schedule (ETV Bharat)

பாரீஸ்: 33வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஜூலை 26ஆம் தேதி கோலாகல தொடக்க விழாவுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜூலை.31) 5வது நாளில் இந்திய வீரர் வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் சாதிக்க உள்ளனர்.

துப்பாக்கிச் சுடுதல்:

துப்பாக்கிச் சுடுத போட்டியில் இந்திய வீரர்கள் ஐஸ்வர்யா தோமர் மற்றும் ஸ்வப்னில் குசலே ஆகியோர் 50 மீட்டர் ரைபிள் 3ஆம் நிலைக்கான ஆண்கள் தகுதி சுற்றுப் போட்டியில் இன்று விளையாடுகின்றனர். இந்த பிரிவில் இறுதிப் போட்டி வியாழக்கிழமை நடைபெறுகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஐஸ்வர்யா தோமர் இந்த போட்டியில் நிச்சயம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச தரவரிசையில் 23வது இடத்தில் உள்ள ஐஸ்வர்யா தோமர், உலகக் கோப்பையில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் கடந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொண்டார். ஆனால் போட்டியில் 21வது இடத்தை அவர் பிடித்தார். அதேபோல் உலகத் தரவரிசையில் 62வது இடத்தில் இருக்கும் ஸ்வப்னில், ஒலிம்பிக்கில் முதல் முறையாக களம் காணுகிறார். இருவரது போட்டியும் இந்திய நேரப்படி மதியம் 12:30 மணி அளவில் நடைபெறுகிறது.

பேட்மிண்டன்:

பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து இந்திய நேரப்படி 12:50 மணிக்கு விளையாடுகிறார். அதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரவில் எச்.எஸ்.பிரணாய் இந்திய நேரப்படி 11:00 மணிக்கும் அதைத் தொடர்ந்து லக்சயா சென் மதிய 1:40 மணிக்கும் விளையாடுகின்றனர்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் தொடர்ந்து மூன்றாவது பதக்கத்தை வெல்லும் முனைப்பில் உள்ள பிவி சிந்து, எஸ்தோனியாவின் கிறிஸ்டின் குபாவை எதிர்கொள்கிறார். அதேபோல், லக்சயா சென், இந்தோனேசியாவை சேர்ந்த ஜொனாதன் கிறிஸ்டியை நாக் அவுட் சுற்றில் எதிர்கொள்கிறார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே லக்சயா சென்னால் கால் இறுதிக்கு தகுதி பெற முடியும். அதேபோல், எச்.எஸ்.பிரணாய், வியட்நாமின் டக் பாட் லீயை எதிர்கொள்கிறார்.

டேபிள் டென்னிஸ்:

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 32வது சுற்று ஆட்டத்தில் பிற்பகல் 1:30 மணிக்கு ஸ்ரீஜா அகுலா களம் காணுகிறார். 32வது சுற்றில் சிங்கப்பூரின் ஜெங் ஜியானை எதிர்த்து ஸ்ரீஜா அகுலா விளையாடுகிறார். இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும்பட்சத்தில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு அவர் முன்னேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

குத்துச்சண்டை:

பெண்களுக்கான 75 கிலோ ரவுண்ட் ஆப் 16 சுற்றில் லவ்லினா போர்கோஹைன் மதியம் 3:50 மணிக்கு நார்வேயின் சன்னிவா ஹாஃப்ஸ்டாட்டை எதிர்த்துப் போட்டியிடுகிறார். அந்த ஆட்டத்தில் லவ்லினா வெற்றி பெறும் பட்சத்தில் அவர் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார். அதேபோல், ஆடவருக்கான 71 கிலோ 4வது சுற்றில் இந்திய வீரர் நிஷாந்த் தேவ் நள்ளிரவில் ஈக்வடார் நாட்டை சேர்ந்த ஜோஸ் ரோட்ரிகஸை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இதையும் படிங்க:பாரீசில் புயல் எச்சரிக்கை! ஒலிம்பிக் போட்டி ரத்தாகுமா? - Paris Olympics Storm Alert

ABOUT THE AUTHOR

...view details