ரஃபா (காசா): காசா நகரத்தில் அமைந்துள்ள ரஃபா பகுதியில் வசித்து வந்த ராணியா அபு அன்சா என்ற பெண் திருமணம் ஆகிய 10 வருடங்கள் ஆன நிலையில் குழந்தை இல்லாமல் பல்வேறு மருத்துவச் சோதனைகள் எடுத்துக்கொண்டு சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு தற்போது கருத்தரித்துக் கடந்த 5 மாதத்திற்கு முன்பு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
இந்த நிலையில், காசா நகரத்தில் அமைந்துள்ள ரஃபாவில் நேற்று (மார்ச் 02) இரவு இஸ்ரேலியப் படையினர்க் குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். அப்போது, ராணியா அபு அன்சா மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கியிருந்த வீட்டையும் இஸ்ரேலியப் படையினர் தாக்கியது. இந்த தாக்குதலில், ராணியா அபு அன்சாவின் ஐந்து மாத இரட்டைக் குழந்தைகளான, நயீம் மற்றும் விஸ்ஸாம் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் 11 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறப்படுகிறது.
இதுமட்டும் அல்லாது, இடிபாடுகளுக்கு அடியில் மேலும் ஒன்பது பேர் காணவில்லை என்று தப்பிப்பிழைத்தவர்கள் மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து ராணியா அபு அன்சா கூறுகையில், "இரவு சுமார் 10 மணியளவில் எனது ஆண் குழந்தையான நயீமுக்கு தாய்ப்பால் கொடுக்க ஒரு கையிலும், பெண் குழந்தையான விஸ்ஸாமை மறு கையிலும் வைத்துக்கொண்டு தூங்கச் சென்றேன். எனது கணவன் அவர்கள் பக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரா விதமாகத் தக்குதல் நடத்தப்பட்டது. அந்த தக்குதலில் எங்கள் வீடு இடிந்து விழுந்தது" என்று கூறினார்.