தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

கேப்டன் விஜயகாந்த் எனக்கு அப்பா..! - ஆர்.கே.செல்வமணி உருக்கம் - கேப்டன் விஜயகாந்த் நினைவஞ்சலி

Captain Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு, தமிழ்நாடு மேடை நடன கலைஞர்கள் தலைமை சங்கம் சார்பில் நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டத்தில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, 'விஜயகாந்த் திருவுருவப்படத்தை திறந்து வைத்தபோது, ஒரு இயக்குநராக இல்லாமல், ஒரு அப்பாவின் படத்தை திறந்து வைக்கும் மகனாகவே உணர்ந்ததாகவும்' பேசினார்.

captain vijayakanth
கேப்டன் விஜயகாந்த்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 11:00 AM IST

சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் திடீரென உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர். இவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தினமும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கேப்டன் விஜயகாந்த் இறந்து ஒரு மாத காலம் ஆன நிலையில், தமிழ்நாடு மேடை நடன கலைஞர்கள் தலைமை சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் தலைவர் பிரேம் நாத், செயலாளர் எல்.கே.அந்தோணி, பொருளாளர் எம்.ஜி.ஆர்.இக்பால் ஆகியோர் மறைந்த கேப்டன் விஜயகாந்துக்காக நினைவஞ்சலி கூட்டம் நடத்தினர்.

மேலும், மறைந்த காமெடி நடிகர் போண்டா மணி மற்றும் கேப்டன் விஜயகாந்த் ஆகியோரின் படத்திறப்பு மற்றும் நினைவஞ்சலி கூட்டமும் நடத்தினர். இதில் இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, அரவிந்தராஜ், செந்தில்நாதன், பாரதி கணேஷ், நடிகர்கள் முத்துக்காளை, பெஞ்சமின், சாரப்பாம்பு சுப்புராஜ், வெங்கல் ராவ், ஜூலி பாஸ்கர், ஜெய சூர்யா, ராஜ் காந்த், சிவகுமார், லொள்ளு சபா ஜீவா, சிவன் சீனிவாசன், ஆகியோர் கலந்து கொண்டு, அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மேடையில் பேசிய இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, 'ஒரு நடிகருக்கு ஒரு இயக்குநர் படம் திறந்து வைப்பதாக நான் இங்கு வரவில்லை. ஒரு அப்பாவுக்கு ஒரு மகன் படம் திறந்து வைப்பதாகவே உணர்கிறேன்' என உணர்ச்சிப் பொங்க பேசினார். மேலும், செந்தில்நாதன் பேச முடியாமல் கண் கலங்கினார்.

திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தவர் கேப்டன் விஜயகாந்த். இதன் பின்னர், காமெடி நடிகர் போண்டா மணி குடும்பத்தினருக்கு, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி கையால், தமிழ்நாடு மேடை நடன கலைஞர்கள் தலைமை சங்க தலைவர் பிரேம் நாத் உதவித்தொகை வழங்கினார்.

முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சி காமராஜர் அரங்கில் நடைபெற்றது. அதில், "நடிகர் விஜயகாந்த் பெயரை நடிகர் சங்கம் வளாகத்திற்கு வைக்க வேண்டும். விஜயகாந்த் நடிகர் சங்கத்தில் இருந்ததால் நடிகர் சங்கத்திற்கே பெருமை. புலன் விசாரணை படத்தின் பூஜை டிசம்பர் 28ஆம் தேதி நடைபெற்றது. அதே டிசம்பர் 28ஆம் தேதி விஜயகாந்த் மறைந்தார் அந்த நாளை மறக்க மாட்டேன்" என்றார்.

இதையும் படிங்க:"நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குவது எனக்கு உறுதுணையாக இருப்போம் என நினைத்து இருப்பார்" - சீமான்

ABOUT THE AUTHOR

...view details