சென்னை:நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'ராயன்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது தனுஷ் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் தனுஷ் படங்களுக்கு கட்டுப்பாடு விதித்தது. அதில், இனி தனுஷை வைத்து படம் தயாரிக்க நினைக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. தனுஷ் நிறைய தயாரிப்பாளரிடம் முன்பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு படம் பண்ணுவதில்லை என்று கூறப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்திற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பிலும் மாறி மாறி அறிக்கைகள் வெளியிடப்பட்டன. பின்னர் சமீபத்தில் நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் நாசர், தனுஷ் விவகாரத்தில் சுமூக முடிவு எட்டப்படும் என்றார். மேலும் இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றார்.
இதையும் படிங்க:அஜித்குமாரின் புதிய போர்ஷ் கார்; ஷாலினி இன்ஸ்டா பதிவு... இந்த கார இவரும் வெச்சிருக்கார்?