பெங்களூரு : தமிழநாட்டிற்கு காவிரியில் இருந்து எந்த சூழ்நிலையிலும் தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார் தெரிவித்து உள்ளார். கிருஷ்ணராஜ சாகர் அணை வழியாக தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடப்படுவதாக மாநில அரசுக்கு எதிராக போராட்டம் வலுக்கும் நிலையில், பெங்களூருவுக்கு தான் தண்ணீர் திறந்து விடப்படுவதாகவும் தமிழகத்திற்கு இல்லை என்றும் டி.கே சிவக்குமார் தெரிவித்து உள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கான பேச்சுக்கே இடம் இல்லை என்றும் எந்த சூழ்நிலையிலும் தண்ணீர் திறந்து விட முடியாது என்றும் டி.கே சிவக்குமார் தெரிவித்து உள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் கூறி உள்ளார்.
தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரின் அளவு குறித்த விவரங்கள் உள்ளதாகவும், தற்போது தண்ணீர் திறந்து விட்டாலும் தமிழகத்தை காவிரி நீர் சென்றடைய நான்கு நாட்கள் ஆகும் என்றும் டி.கே சிவக்குமார் தெரிவித்து உள்ளார். மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட அரசு முட்டாள்கள் அல்ல என்றும் சிவக்குமார் கூறி உள்ளார்.