தமிழ்நாடு

tamil nadu

"போரை நிறுத்திய பிரதமரால் நீட் முறைகேட்டை தடுக்க முடியவில்லையா?"- ராகுல் காந்தி கேள்வி! - Rahul Gandhi on PM Modi

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 20, 2024, 5:40 PM IST

உக்ரைன் போரை தடுத்து நிறுத்திய பிரதமர் மோடியால் நீட் வினாத் தாள் கசிவை தடுக்க முடியாமல் போனதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Etv Bharat
Congress leader Rahul Gandhi (Photo: X@INCIndia)

டெல்லி:நீட் தேர்வில் முறைகேடு மற்றும் யுஜிசி நெட் தேர்வு ரத்து குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, மக்களவை தேர்தலுக்கு பின் பிரதமர் மோடி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், கல்வி மையங்கள் அனைத்தும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவை மீட்கப்படும் வரை, வினாத்தாள் கசிவு தடுக்கப்படாது என்றார். உக்ரைன் - ரஷ்யா, இஸ்ரேல் - காஸா நாடுகளுக்கு இடையேயான போரை பிரதமர் மோடி தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது, ஆனால், நீட் வினாத்தாள் கசிவதை பிரதமர் மோடியால் தடுக்க முடியவில்லையா அல்லது அவர் அதனை விரும்பவில்லையா என்று ராகுல் காந்தி கூறினார்.

ஜோடோ யாத்திரை நடைப்பயணத்தின் போது பலரும் இந்த தேர்வு முறைகேடுகள் குறித்து தன்னிடம் புகார் அளித்ததாக கூறினார். மேலும் மத்தியப் பிரதேசத்தில் வியாபம் தேர்வு மற்றும் ஆள்சேர்ப்பு ஊழல் பற்றிக் குறிப்பிட்ட ராகுல் காந்தி வியாபம் ஊழல், நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு நீட் முறைகேடாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.

எதையும் தன்னிச்சையாக செய்யக்கூடாது என்றும் ஒரு தேர்வுக்கு பொருந்தும் விதிகள் மற்றொன்றுக்கு பொருந்தும், நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். அதேபோல் ஐதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசி தனது எக்ஸ் பக்கத்தில், நீட் ஊழலுக்குப் பிறகு, தற்போது யுஜிசி நெட் தேர்வும் அதன் தாள் கசிந்ததால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பே பெரிய விஷயம், மோடி அரசால் ஒரு தேர்வை கூட சரியாக நடத்த முடியவில்லை” என்று பதிவிட்டுள்ளார். மேலும், 15 மாநிலங்களில் நடந்த 41 வினாத்தாள் கசிவுகள் குறித்து சுட்டிக் காட்டிய அசாதுதீன் ஒவைசி மொத்தம் 1 கோடி 40 இளைஞர்கள் இந்தத் தேர்வுகளை எழுத வேண்டியிருந்ததாகவும் வேலை கொடுக்காமல் இருப்பதற்குத் தாள் கசிவு ஒரு சாக்காக மாறியிருக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க:நாட்டை உலுக்கிய கள்ளச்சாராய மரணங்கள்! தொடர் கதையாகும் பலி! பின்னணியில் யார்? - Major Illegal Liquor Death In India

ABOUT THE AUTHOR

...view details