தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வக்ஃப் திருத்த மசோதா - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ஒப்படைப்பு! - WAQF AMENDMENT BILL

வக்ஃப் திருத்த மசோதாவை நாடாளுமனறக் கூட்டுக் குழு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இன்று வழங்கியது.

சபாநாயகர் ஓம் பிர்லா கோப்புப்படம்
சபாநாயகர் ஓம் பிர்லா கோப்புப்படம் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2025, 1:56 PM IST

புதுடெல்லி: வக்ஃப் (திருத்தம்) மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற கூட்டுக் குழு வியாழக்கிழமை தனது அறிக்கையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பித்தது. குழுத் தலைவர் ஜகதாம்பிகா பால், சபாநாயகர் ஓம் பிர்லாவை அவரது நாடாளுமன்ற இல்ல அலுவலகத்தில் சந்தித்து அறிக்கையை வழங்கினார்.

ஆளும் பாஜக உறுப்பினர்கள் பரிந்துரைத்த மாற்றங்களைக் கொண்ட அறிக்கையை நாடாளுமன்ற கூட்டுக் குழு பெரும்பான்மை வாக்குகளால் நேற்று ஏற்றுக் கொண்டது. எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் புறக்கணிக்கப்பட்டதால், அவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். மேலும் இது வக்ஃப் வாரியங்களை அழிக்கும் முயற்சி என்று குற்றம்சாட்டின. வக்ஃப் (திருத்தம்) மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழு வரைவுச் சட்டம் குறித்த அறிக்கையை 15-11 பெரும்பான்மை வாக்குகளால் ஏற்றுக்கொண்டது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அறிக்கைக்கு எதிர்ப்புக் குறிப்புகளைச் சமர்ப்பித்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதா, வக்ஃப் சொத்துக்களை நிர்வகிப்பதில் நவீனத்துவம், வெளிப்படைத்தன்மை உள்ளிட்டவற்றை கொண்டு வர முயல்கிறது என்று பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

மறுபுறம், எதிர்க்கட்சிகள் இதை முஸ்லிம் சமூகத்தின் அரசியலமைப்பு உரிமைகள் மீதான தாக்குதல் என்றும் வக்ஃப் வாரியங்களின் செயல்பாட்டில் தலையிடுவது என்றும் குற்றம்சாட்டி வருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details