ஆந்திரா: ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் இருந்து 58 கிலோமீட்டர் கிழக்கு வடகிழக்கு திசையில் 3.9 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த நிலநடுக்கம் இன்று (மார்ச் 14) இரவு 08.43 மணி 5 நொடிகளுக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது. மேலும், தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள வரைபடத்தின்படி, நில அதிர்வு ஏற்பட்ட இடத்தின் அருகில் சென்னை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான், ஆந்திராவில் நிலடுக்கம்! - Earthquake in Japan Andhra
Earthquake in Chennai: திருப்பதி அருகே 3.9 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
![ஜப்பான், ஆந்திராவில் நிலடுக்கம்! Etv Bharat](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14-03-2024/1200-675-20987305-thumbnail-16x9-earthquake.jpg)
Etv Bharat
Published : Mar 14, 2024, 9:33 PM IST
மேலும், ஜப்பானின் டோக்கியோவில் வடகிழக்காக 208 கிலோமீட்டர் தொலவில் 6.0 என்ற ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று இரவு 08.44 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கம் 68 கிலோமீட்டார் ஆழத்தில் பதிவாகியுள்ளது.