தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திராவில் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; 25 பயணிகள் காயம், 5 பேர் கவலைக்கிடம்! - ANDHRA BUS ACCIDENT

ஆந்திராவில் ஆர்டிசி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பயணிகள் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்து
விபத்துக்குள்ளான பேருந்து (credit - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2024, 11:40 AM IST

புலிவெந்துலா:ஆந்திராவில் ஆர்டிசி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் 25 பேர் காயமடைந்துள்ளனர். ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம், ஒய்எஸ்ஆர் மாவட்டம், புலிவெந்துலா அருகே ஆர்டிசி பேருந்து கதிரில் இருந்து பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிரே முந்திச் செல்ல முயன்ற வாகனங்கள் மீது மோதாமல் இருக்க, ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார்.

இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த மரங்கள் மீது மோதி, பிறகு அங்கிருந்த 30 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து பெரும் விபத்துக்குளாகியுள்ளது.

இதையும் படிங்க:டானா புயல்: 28 ரயில்கள் ரத்து! தமிழ்நாட்டில் எத்தனை?

இந்த விபத்தில், பேருந்தில் இருந்த 25 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், ஐந்து பயணிகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகளுக்குச் சென்ற அதிகாரிகள், உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details