கல்குவாரி லாரிகளைச் சிறைப்பிடித்த பொதுமக்கள்

By

Published : Feb 4, 2021, 11:13 AM IST

thumbnail
பெரம்பலூர் மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட கிராமங்கள் அருகே 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. அப்பகுதியில் உள்ள குவாரிகளில் வெடிவைத்து எடுக்கப்படும் கற்கள் மிகப்பெரிய டிப்பர் லாரிகளில் ஏற்றிச் செல்லப்படுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன எனத் தெரிகிறது. இந்நிலையில் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்குவாரி லாரிகளைச் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.