100 விழுக்காடு வாக்குப்பதிவு - தருமபுரியில் மாணவிகள் பேரணி
தருமபுரி: 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் சக்திகைலாஷ் மகளிர் கல்லூரி மாணவிகள் சுமார் 1,500 பேர் இன்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து நான்கு சாலை வரை பேரணியாகச் சென்றனர். இப்பேரணியை தேர்தல் பிரிவு விழிப்புணர்வு அலுவலர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.