கதை திருட்டு விவகாரத்தை தவிர்க்க எழுத்தாளர் சங்கத்திற்கு கூடுதல் அதிகாரம்! - எழும் கோரிக்கை
"லிங்கா திருட்டுக் கதை இல்லை என்பதை நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை அனைவரும் தெரிந்துகொள்ளவே பத்திரிகையாளர் முன்னிலையில் தெரிவித்துள்ளோம். எனக்குத் தெரிந்தவரை இதுவரை நீதிமன்றம் வரை சென்று எந்த கதாசிரியரும் வென்றதில்லை. காப்புரிமை சட்டத்தின்படி தனது கதை என நிரூபிப்பது மிகவும் கடினம்.
இதுபோன்று எதிர்காலத்தில் பிரச்னை வராமல் இருக்க எழுத்தாளர் சங்கத்துக்கு கூடுதல் அதிகாரம் இருக்க வேண்டும். அதை வைத்து அங்கேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். சங்கம் ஆட்சேபனை தெரிவிக்காமல் இருந்தால் நீதிமன்றத்தை நாட வேண்டும்" என்று இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார்.
Last Updated : Jan 28, 2020, 10:14 AM IST