கேரளாவில் ‘அறை விடும்’ போட்டி! - விஷு பண்.டிகையின் கொண்டாட்டம்
🎬 Watch Now: Feature Video

கேரளாவில் விஷு பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திருவிழாவின் ஒரு பகுதியான அறை விடும் போட்டி நேற்று நடைபெற்றது. கேரளாவின் கண்ணூரில் உள்ள மாவிலக்கு கோயிலின் நேற்று (ஏப்.19) ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக வந்து அறை விடும் போட்டியில் கலந்து கொண்டனர். கரோனா ஊரடங்கால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் போட்டி நடைபெற்றதால் அதிக அளவில் பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த ஆண்டு கேரளா முழுவதும் இருந்து மக்கள் திருவிழாவைக் காண நாலாஞ்சிரா நெல் வயல்களுக்கு வந்திருந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST