thumbnail

By

Published : Jul 13, 2023, 4:05 PM IST

ETV Bharat / Videos

நோய் நீங்க சாட்டை அடி.. தருமபுரியில் விநோத திருவிழா!

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மூக்காரெட்டிப்பட்டி கிராமத்தில் கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, புதுப்பட்டி, இருளப்பட்டி, பாப்பம்பாடி ஆகிய 5 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை திரௌபதி அம்மன் கோவில் திருவிழா நடத்துவது வழக்கம். 

அந்த வகையில் இரண்டு நாட்களுக்கு முன் இத்திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கி அம்மனுக்கு பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திரெளபதி அம்மன் மற்றும் பஞ்ச பாண்டவர்களான தர்மன், அர்ச்சுனன், நகுலன், பீமன், சகாதேவன் உள்ளிட்ட சுவாமிகளை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு ஊர்வலமாக வீதி உலா சென்றனர். 

மேலும் அம்மனிடம் உள்ள சாட்டையால் பக்தர்கள் அடி வாங்கினால் நோய் நீங்கும் என்பது நம்பிக்கை. சுவாமி வீதி உலா வரும் போது பெண்கள் தரையில் படுத்து கொண்டும் கீழே அமர்ந்தவாறு இருக்கும் போது அம்மன், தங்களை கடந்து சென்றால் தீராத பிரச்னைகள் தீரும் என்பதும், குழந்தை பாக்கியம் மற்றும் செல்வம் பெருகும் என்பதும் ஐதீகமாக கருதப்படுகிறது. 

இந்நிலையில், ஏராளமான பக்தர்கள் தங்களின் நோய் இன்றி வாழ பில்லி சூனியம் நீங்க சாட்டையடி பெற்றுக் கொண்டு நேர்த்திக் கடனைச் செலுத்தியும்; குழந்தை பாக்கியம் மற்றும் தீராத பிரச்னைகள் தீர தரையில் படுத்தவாறும் தரையில் அமர்ந்தவாறும் அம்மனை வழிபாடு செய்தனர். 

இந்த திருவிழாவைக் காண வாணியம்பாடி, ஊத்தங்கரை, சேலம், பெங்களூர், ஓசூர், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு அம்மனின் அருள் ஆசியைப் பெற்றுச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.