பைக் மீது கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட குடும்பம்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி - MAYILADUTHURAI CAR BIKE ACCIDENT

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 29, 2024, 12:02 PM IST

thumbnail
சிசிடிவி காட்சி (CREDITS- ETV Bharat Tamil Nadu)

மயிலாடுதுறை: தரங்கம்பாடி கடைவீதி சாலையில் கடந்த 21 ஆம் தேதி அதிவேகமாக வந்த கார் எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த பூம்புகார் அருகே வானகிரி மீனவர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் (22) அவரது மனைவி சசிகலா மற்றும் 2 வயது மகன் பாரத் சஞ்ஜன் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி ஸ்ரீதர் - சசிகலா ஆகியோர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த 2 வயது குழந்தை பாரத் சஞ்ஜன் 108 ஆம்புலன்ஸ் மூலம் பொறையார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தொடர் சிகிச்சையில் உள்ளார்.

விபத்திற்கு காரணமான காரை ஓட்டிய சென்னையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் அருள்சாலமன் (43 வயது) என்பவரை கைது செய்த பொறையார் போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த விபத்து தொடர்பான நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சொகுசு காரில் கட்டுக் கட்டாக சிக்கிய ரூ.1 கோடி.. பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.