thumbnail

காவல் நிலைய கதவிற்கே கைவிலங்கா? -வீடியோ வைரல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

வேலூர்: வேலூர் மாவட்டம், கணியம்பாடிக்குட்பட்ட பகுதியில் பல குற்றச் செயல்களைத் தடுக்கும் விதமாக வேலூர் கிராமிய காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலையத்திற்கு மொத்தம் இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன.

ஒரு நுழைவு வாயிலில் ஆவணங்கள் இன்றி பயன்படுத்தி வந்த வாகனங்கள், மது போதையில் சிக்கிய வாகனங்கள், திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து பறிமுதல் செய்த வாகனங்கள் என போலீசாரால் பல வழக்கு பதியப்பட்டு கைப்பற்றப்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நுழைவு வாயிலில் உள்ள கதவிற்கு போலீசார் பூட்டு போடாமல், பூட்டிற்கு பதிலாக கைதிகளுக்கு போடப்படும் கைவிலங்கை பூட்டாக பயன்படுத்தி வருகின்றனர். காவல் நிலையத்திற்கு ஒரு பூட்டு கூட வாங்காமல், கைதிகளுக்கு பயன்படுத்தப்படும் கைவிலங்கை பூட்டாக பயன்படுத்தி வருவது, அவ்வழியாகச் செல்லும் பொதுமக்களிடையே பேசு பொருளாக மாறி உள்ளது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.