கரோனா வைரஸ் தொற்று நடவடிக்கைகள் குறித்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ், தொற்று நோய்த் தடுப்பு வல்லுநர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பென்ஸ், அமெரிக்காவில் தற்போதுவரை மக்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், பரிசோதனைகளை விரைந்து முடிக்க திட்டமிட்டிருந்ததாகவும், தாங்கள் எண்ணியதைவிட பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக தொற்றுநோய் வல்லுநர் அந்தோணி பௌசி நோய்த் தடுப்பு மருந்துகளைக் கண்டறிய குறைந்தது 12 முதல் 18 மாதங்கள் கால அவகாசங்கள் தேவைப்படும் எனத் தெரிவித்திருந்ததாகவும், பல்வேறு மருத்துவர்களும் இதே கருத்தை கூறியதாகவும் தெரிவித்தார்.
தற்போது, அமெரிக்காவின் முக்கிய நகரங்களான நியூயார்க், நியு ஜெர்சி, கெனடிகட், டெட்ரோய்ட் உள்ளிட்ட பகுதிகளில் முந்தைய பாதிப்புகளைக் காட்டிலும் தற்போது வைரசின் தீவிரம் குறைந்துள்ளதாகவும் கூறினார்.