தமிழ்நாடு

tamil nadu

கோடநாடு வழக்கு; “இண்டர்போல் விசாரணை அறிக்கை இன்னும் வரவில்லை” - அரசுத் தரப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2024, 4:32 PM IST

Published : Aug 30, 2024, 4:32 PM IST

உதகை நீதிமன்றம்
உதகை நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கினை விசாரித்தது வரும் நீதிபதி அப்துல் காதர் விடுப்பில் உள்ளதால், குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த நிலையில், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வாளையார் மனோஜ் மட்டும் இன்று நேரில் ஆஜராகினார்.

அதேபோல், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர். மேலும், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் சிபிசிஐடி போலீசார் நேரில் வந்தனர். அப்போது, இந்த வழக்கில் வெளிநாட்டில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்போன் எண்ணிற்கு அழைப்புகள் வந்துள்ளது குறித்து இன்டர்போல் விசாரணை அறிக்கை இன்னும் வந்து சேரவில்லை என்றும், தற்போது நடைபெற்று வரும் புலன் விசாரணை குறித்தும் நீதிபதியிடம் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் தெரிவித்தனர். இதனையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் 27ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details