ETV Bharat / snippets

கோடநாடு வழக்கு; 2 தனியார் வங்கி ஊழியர்கள் ஆஜர்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

சிபிசிஐடி அலுவலகம், கோடநாடு எஸ்டேட்
சிபிசிஐடி அலுவலகம், கோடநாடு எஸ்டேட் (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி முன்பு கோயில் பூசாரி விக்னேஷ், தனியார் வங்கி ஊழியர்கள் 2 பேர் ஆஜராகியுள்ளனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை, கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 19 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதுவரை 500க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின் அடிப்படையில், ஒவ்வொருவருக்காக சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அந்த வரிசையில், கோடநாடு எஸ்டேட்டில் பல ஆண்டுகளாக கோயில் பூசாரியாக இருந்து வரும் விக்னேஷ் மற்றும் புதுச்சேரி மாநில வங்கி மேலாளருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பிருந்தனர். அதன்படி, இன்று கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு இருவரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

கோயம்புத்தூர்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி முன்பு கோயில் பூசாரி விக்னேஷ், தனியார் வங்கி ஊழியர்கள் 2 பேர் ஆஜராகியுள்ளனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலை, கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 19 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதுவரை 500க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையின் அடிப்படையில், ஒவ்வொருவருக்காக சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அந்த வரிசையில், கோடநாடு எஸ்டேட்டில் பல ஆண்டுகளாக கோயில் பூசாரியாக இருந்து வரும் விக்னேஷ் மற்றும் புதுச்சேரி மாநில வங்கி மேலாளருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பிருந்தனர். அதன்படி, இன்று கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு இருவரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.