ETV Bharat / snippets

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க முயற்சி? தண்டவாளத்தில் கல் வைத்த இருவர் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2024, 10:11 AM IST

தண்டவாளம் கோப்புப்படம் மற்றும் கைதான இருவர்
தண்டவாளம் கோப்புப்படம் மற்றும் கைதான இருவர் (Credits - ETV Bharat Tamil Nadu)

விருதுநகர்: செங்கோட்டை - சென்னை இடையே இயக்கப்படும் பொதிகை விரைவு ரயில், கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி வழக்கம்போல் சென்னை சென்று கொண்டிருந்தது. அப்போது, கடையநல்லூர் - பாம்பகோவில்சந்தை ரயில் நிலையங்களுக்கு இடையே சென்ற போது, தண்டவாளத்தில் இருந்த கல் மீது மோதி என்ஜினின் முன்பக்க தகடு சேதமடைந்தது.

பின்னர், இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், தண்டவாளத்தில் கல் வைத்த சம்பவத்தில், அதே பகுதியில் உள்ள கல் குவாரியில் பணியாற்றி வரும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பால்சிங் பகேல் (21) மற்றும் ஈஸ்வர் மேடியா (23) ஆகிய இருவரை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்: செங்கோட்டை - சென்னை இடையே இயக்கப்படும் பொதிகை விரைவு ரயில், கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி வழக்கம்போல் சென்னை சென்று கொண்டிருந்தது. அப்போது, கடையநல்லூர் - பாம்பகோவில்சந்தை ரயில் நிலையங்களுக்கு இடையே சென்ற போது, தண்டவாளத்தில் இருந்த கல் மீது மோதி என்ஜினின் முன்பக்க தகடு சேதமடைந்தது.

பின்னர், இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், தண்டவாளத்தில் கல் வைத்த சம்பவத்தில், அதே பகுதியில் உள்ள கல் குவாரியில் பணியாற்றி வரும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பால்சிங் பகேல் (21) மற்றும் ஈஸ்வர் மேடியா (23) ஆகிய இருவரை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.