தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 1, 2024, 3:38 PM IST

ETV Bharat / snippets

வேலூரில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது.. காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!

காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள்
காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்கள் (credits - ETV Bharat Tamil Nadu)

வேலூர்: கே.வி.குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காட்டன் சூதாட்டம் நடைபெறுவதாக வந்த ரகசியத் தகவலின் அடிப்படையில், கே.வி.குப்பம் காவல் ஆய்வாளர் நிர்மலா மற்றும் உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்பொழுது கே.வி.குப்பம் கலைஞர் நகர் பகுதியில் சட்டவிரோத 3ஆம் நம்பர் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட வந்த குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த முகமது வசி (28) மற்றும் குமரவேல் (38) ஆகிய இருவரைச் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 200 ரூபாய் பணம், 12 மூன்றாம் நம்பர் காட்டன் சீட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், ஏழை எளிய மக்களிடம் பணத்தை பறிக்கும் காட்டன் சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வேலூர் மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details