தமிழ்நாடு

tamil nadu

ராஜபாளையம் சிறப்பு சார்பு ஆய்வாளர் வாகன விபத்தில் உயிரிழப்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 7:26 PM IST

Police station
ராஜபாளையம் காவல் நிலையம் மற்றும் ஆய்வாளர் நடராஜன் (Credits - ETV Bharat Tamil Nadu)

விருதுநகர்: ஆலங்குளம் அருகே உள்ள சங்கரமூர்த்திபட்டியைச் சேர்ந்தவர் நடராஜன் (53). இவர் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இன்று காலை பைக்கில் தனது மகன் முகேஷை அழைத்துக் கொண்டு ராஜபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது, சொக்கலிங்கபுரம் அருகே வந்தபோது. குறுக்கே மற்றொரு பைக் வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் வாகனத்தை நிறுத்த முயன்றபோது எதிர்பாராத விதமாக குறுக்கே வந்த வாகனத்தில் மோதி கீழே விழுந்துள்ளார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம், இவரது மகன் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். பின்னர், நடராஜனை அருகே இருந்தவர்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பின்னர், உடலைக் கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து உயிரிழந்த நடராஜனின் மனைவி முருகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details