தமிழ்நாடு

tamil nadu

தாம்பரத்தில் மது போதையில் காரை இயக்கிய காவலர் பணியிடை மாற்றம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 3, 2024, 4:34 PM IST

பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்
பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர் (Credits -ETV Bharat Tamil Nadu)

சென்னை:சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர், நேற்று முன்தினம் தாம்பரம் மண்ணிவாக்கம் சாலையின் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது, கருப்பு நிற கார் ஒன்று அவரது இருசக்கர வாகனத்தை இடிப்பது போல் தாறுமாறாக சென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த காரை மடக்கி பிடித்து போது, மது போதையில் ஸ்ரீராமதுரை என்ற போலீசார் காரை இயக்கியது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தாம்பரம் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

இதில் காரை இயக்கியது கண்ணகி நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ராமதுரை என்பது தெரியவந்தது. இதையடுத்து, ராமதுரையை ஆயுதப்படைக்கு பணியிடை மாற்றம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அறிய:தாறுமாறாக ஓடிய கார்.. உள்ளே போலீஸ் போர்டு.. வைரலாகும் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details