திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாநகராட்சியின் 39 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் புனல்காடு பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த புனல்காடு பகுதியின் இயற்கை வளங்களை அழித்து குப்பைக்கிடங்கு அமைப்பதாகவும், இதனால் ஆடையூர், புனல்காடு, தேவனந்தல், கலர்கொட்டாய் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளின் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், குப்பைக்கிடங்கு அமைத்தால் அதிலிருந்து கழிவுநீர் ஊறி மண்வளத்தை பாதிக்கும் என்றும் பலமுறை தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
புனல்காடு குப்பைக்கிடங்கிற்கு எதிர்ப்பு.. கழிவுநீரோடு சேர்ந்து குடிநீர் வருவதாக பொதுமக்கள் சாலை மறியல்!
Published : Aug 14, 2024, 9:05 PM IST
Published : Aug 14, 2024, 9:05 PM IST
பொதுமக்கள் சாலை மறியல் (Credits - ETV Bharat Tamil Nadu)
இருப்பினும், அதே பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் குடிநீர் கழிவுநீர் போல் வருவதாகக் கூறி, 200க்கும் மேற்பட்டோர் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருவண்ணாமலை - காஞ்சி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மக்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.