சேலம் ஏற்காட்டில் பெய்து வரும் கனமழையால் மஞ்சகுட்டை மலை பாதை சாலையில் மின் கம்பம் மீது பெரிய மரம் விழுந்ததில், அடுத்தடுத்து இருந்த 5 மின்கம்பங்கள் சாலையில் சாய்ந்தது. இதனால் 32 மலைக் கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கனமழையில் மின்கம்பத்தை பதம் பார்த்த பெரிய மரம்! 32 கிராமங்களுக்கு மின்சாரம் கட்!
Published : 15 hours ago
மின்கம்பத்தில் வேரோடு சாய்ந்து விழுந்த மரம் (ETV Bharat Tamil Nadu)
தற்போது வங்கக் கடலில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்று காலை முதல் இரவு முழுவதும் விட்டு விட்டு கன மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலை ஏற்காடு - மஞ்சகுட்டை கிராமம் செல்லும் மலைப்பாதையில் பெரிய மரம் ஒன்று அருகில் இருந்த மின்சார கம்பம் மீது வேரோடு சாய்ந்து விழுந்தது இதனால், சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.