கோயம்புத்தூர்:தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கி, பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்த காரணத்தால், ஆழியார் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆழியார் கவியருவியில் காட்டாற்று வெள்ளம்.. சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை!
Published : 22 hours ago
இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவியில் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் தடுப்பு வேலிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ஆகையால் பாதுகாப்புக் கருதி, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருவிக்கு வரும் நீரின் அளவு சீரான பின்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அருவியில் குறிக்க ஆர்வத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள், ஆழியார் வனத்துறை சோதனை சாவடியுடன் திருப்பி அனுப்பி வைப்பு.