தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / snippets

கஞ்சா போதையில் தாறுமாறாகச் சென்ற ஆட்டோ.. தட்டிக்கேட்ட நபர் மீது தாக்குதல்!

கார்த்தி மற்றும் அவரது நண்பர் அஸ்வந்த்
கார்த்தி மற்றும் அவரது நண்பர் அஸ்வந்த் (Credits-ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2024, 9:15 AM IST

சென்னை: வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் கார்த்தி (22). ஆட்டோ ஓட்டுநரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் அஸ்வந்த் (21) என்பவருடன் சேர்ந்து கஞ்சா புகைத்துள்ளார். பின்னர் ஆட்டோவை எடுத்துக் கொண்டு இருவரும் ஆலப்பாக்கம் பிரதான சாலையில் ஆபத்தான முறையில் சாகசம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

மேலும், சாலையோரம் நடந்து சென்றவர்கள், சாலையோர வியாபாரிகள் உட்பட பலர் மீது மோதுவது போல ஆட்டோவை ஓட்டி அச்சத்தை ஏற்படுத்தியபடி ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிச் சென்றதாகவும், இதனை சாலையில் சென்ற இரு நபர்கள் தட்டிக்கேட்டபோது, ஆத்திரம் அடைந்த கார்த்தி மற்றும் அவரது நண்பர் அஸ்வந்த் ஆகியோர், தட்டிக்கேட்ட அந்த நபர்களையும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் காயமடைந்த அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த போலீசார், கார்த்தி மற்றும் அஸ்வந்த் இருவரையும் கைது செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details