தமிழ்நாடு

tamil nadu

ஆஷாட நவராத்திரி விழா; காய்கறி அளங்காரத்தில் தஞ்சை வாராஹி அம்மன்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 14, 2024, 6:25 PM IST

varahi amman vegetable alangaram
காய்கறி அளங்காரத்தில் தஞ்சை வாராஹி அம்மன் (Credits- ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்:உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடைபெற்ற ஆஷாட நவராத்திரி விழாவில், ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் காய்கறி அளங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலில் தனி சன்னதியில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் அருள்பாலித்து வருகிறார்.

இந்த மஹா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், 21வது ஆஷாட நவராத்திரி விழா கடந்த ஜூலை 5ஆம் தேதி துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அந்த வகையில், 10ஆம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு காய்கறி அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வாராஹி அம்மனை தரிசனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details