திருப்பத்தூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி பகுதியை சேர்ந்த சாதிக் என்பவர் சூளகிரியில் இருந்து கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு வேலூர் மற்றும் ஆற்காடு பகுதிகளில் உள்ள தினசரி மார்க்கெடுகளில் விற்பனை செய்துவிட்டு, இன்று அதிகாலை மீண்டும் சூளகிரி நோக்கிச்சென்று கொண்டு இருந்தார்.
அப்போது திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டு இருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் நடுவே உள்ள இரும்பு தடுப்பு வேலியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.