தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

"ஒரு அத்தியாயத்தின் முடிவல்ல புதிய சகாப்தத்தின் தொடக்கம்" - இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் ஓய்வு! - Sreejesh retirement

Sreejesh retirement: பாரிஸ் ஒலிம்பிக் தொடருடன் ஓய்வு பெற இருப்பதாக இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் அறிவித்துள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 25, 2024, 3:12 PM IST

ஸ்ரீஜேஷ் கோப்புப்படம்
ஸ்ரீஜேஷ் கோப்புப்படம் (Credits - ANI)

ஹைதராபாத்:விளையாட்டு உலகின் திருவிழா என்று அழைக்கப்படும் 33வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நாளை தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில், இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார். 36 வயதான இவர் 328 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜேஷ், 2004ஆம் ஆண்டு இந்தியா யு-21 அணிக்காக களமிறங்கினார். அதன்பின் இரண்டு ஆண்டுகளில் இந்திய சீனியர் அணியில் இடம்பிடித்தார்.

அதன்பிறகு இந்திய அணிக்காக லண்டன் ஒலிம்பிக், ரியோ ஒலிம்பிக், டோக்கியோ ஒலிம்பிக் என மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது பாரிஸ் ஒலிம்பிக்கில் தொடர்ந்து 4வது முறையாக பங்கேற்கவுள்ளார். கடந்த 2020ல் இந்திய அணி டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கத்தை கைப்பற்றியதற்கு இவர் தனது சிறப்பான பங்களிப்பினை அளித்தார்.

இந்தியாவிற்காக சிறந்த பங்களிப்பினை அளித்து வரும் இவர் உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து அசத்தி வருகிறார். இவரின் திறமைக்கு பரிசளிக்கும் விதமாக 2021, 2022ஆம் ஆண்டுகளில் சிறந்த கோல் கீப்பருக்கான விருதுகளை வழங்கி சர்வதேச ஹாக்கி சம்மேளனம் கவுரவித்தது. இவர் 2025ஆம் ஆண்டு அர்ஜுனா விருதையும், 2017ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதையும், 2021ஆம் ஆண்டு மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதையும் பெற்றுள்ளார்.

கிட்டத்தட்ட 20 வருடங்கள் இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பராக செயல்பட்டு வரும் ஸ்ரீஜேஷ், தற்போது நடைபெற இருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது ஓய்வு குறித்து ஸ்ரீஜேஷ் கூறியதாவது, “சர்வதேச ஹாக்கி போட்டிகளில் இறுதி அத்தியாயத்தில் நான் இருக்கிறேன். இந்த தருணத்தில் என் மனமெல்லாம் நன்றி உணர்வால் நிறைந்துள்ளது.

என்னை முழுவதுமாக நம்பிய இந்திய ஹாக்கி அணி நிர்வாகத்திற்கும், அணியின் பயிற்சியாளர்களுக்கும், என்னுடன் விளையாடிய சக விரர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வரவிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன் நான் ஓய்வு பெற இருக்கிறேன். இது ஒரு அத்தியாயத்தின் முடிவு மட்டுமல்ல, ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் ஆகும்” என தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினராக நீடா அம்பானி மீண்டும் தேர்வு.. பாரிஸில் 'இந்தியா ஹவுஸ்' அமைப்பு

ABOUT THE AUTHOR

...view details