தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Sports Team

Published : 5 hours ago

ETV Bharat / sports

வருண பகவான் வழிவிடுவாரா? இந்தியா - வங்கதேசம் டெஸ்டில் தொடரும் சிக்கல்! - Ind vs Ban 2nd test Delay

Ind vs Ban 2nd Test Day 3: தொடர் மழையின் காரணமாக இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான 3வது நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

Etv Bharat
Inspection in Kanpur Ground (BCCI)

கான்பூர்: இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு நாட்கள் ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெறுமா என்ற சந்தேகம் நிலவுகிறது.

கடந்த 27ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கிய நிலையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், போதிய வெளிச்சமின்மை மற்றும் மழையின் குறுக்கீடு காரணமாக ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

எப்ப போட்டி தொடங்கும்?:

இதுவரை வங்கதேசம் அணி 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் குவித்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டம் கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. கான்பூரில் அதிகாலை முதலே லேசான மழை பெய்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தற்போது மழையின் அளவு சற்று குறைந்து காணப்படும் நிலையில், மைதானத்தை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஐசிசி மற்றும் போட்டி நடுவர் மைதானத்தின் ஈரப்பதம் மற்றும் தண்ணீர் தேங்கி உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். மேற்கொண்டு மழை பெய்யாத நிலையில் 12 மணிக்கு மேல் போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த அப்டேட்:

இருப்பினும் வானிலை தொடர்ந்து மோசமாக இருக்கும் பட்சத்தில் மதியம் 2 மணி அளவில் மீண்டும் மைதானத்தில் ஆய்வு நடத்தப்பட்டு போட்டியை தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் மழை காரணமாக முதல் இரண்டு நாள் ஆட்டம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், இன்றைய நாளிலும் மழையின் குறுக்கீடு இருக்கும் என வானிலை மையம் எச்சரித்து உள்ளது. டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று (செப்.29) கான்பூரில் 65 சதவீதம் வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

மழைக்கு வாய்ப்பு எப்படி?:

அதேபோல், நாளை (செப்.30) நான்காவது நாளில் 59% மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை மைய அறிக்கைகள் கூறுகின்றன. மேலும், கடைசி நாளில் மட்டும் 5% மட்டுமே மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெரும்பாலும் டிராவை நோக்கியே பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிராவை நோக்கி ஆட்டம் செல்லும் பட்சத்தில், அது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு பல்வேறு சிக்கல்களை உருவாக்கும்.

இதையும் படிங்க:வங்கதேச தொடரால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை இழக்கப் போகும் இந்தியா? எப்படி சாத்தியம்? - 2025 WTC Final

ABOUT THE AUTHOR

...view details