தமிழ்நாடு

tamil nadu

வாயை கொடுத்து வாங்கிக் கட்டிய பாக். ரசிகர்! தரமான செய்கை செய்த ஹர்பஜன்! என்ன நடந்தது தெரியுமா? - Harbhajan Singh

By ETV Bharat Sports Team

Published : Aug 2, 2024, 6:12 PM IST

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை என கிண்டிலடித்து பதிவு வெளியிட்ட பாகிஸ்தான் ரசிகர்கருக்கு ஹர்பஜன் சிங் பதிலளித்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Etv Bharat
File Photo: Harbhajan Singh (ANI)

ஐதராபாத்:2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணங்களால் பாகிஸ்தானில் சென்று விளையாடுவதை இந்தியா தவிர்த்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தன் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தனது சமூகவலைதள பக்கத்தில், 2006ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது விளையாடிய ஒரு ஆட்டத்தில், ஹர்பஜன் சிங்கின் ஓவரில் ஷாகித் அப்ரிடி தொடர்ச்சியாக நான்கு சிக்சர்கள் அடித்ததை மேற்கொள்காடி இதற்காகத் தான் இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது என்றும் அதனாலே இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வர மறுப்பதாகவும் பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் ரசிகருக்கு பதிலளிக்கும் வகையில், 2009ஆம் ஆண்டு இலங்கை வீரர்கள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்த நாளேடின் புகைப்படத்தை வெளியிட்டு, இந்த காரணத்திற்காக தான் இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு வருவதில்லை என ஹர்பஜன் சிங் பதிவிட்டு உள்ளார்.

ஹர்பஜன் சிங்கின் இந்த தரமான பதிலடியை சற்றும் எதிர்பாராத பாகிஸ்தான் ரசிகர் வாயடைத்தார் போல் சென்றார். பாகிஸ்தான் ரசிகருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹர்பஜன் சிங் வெளியிட்ட பதிவுக்கு இந்திய ரசிகர்கள் தொடர்ந்து வரவேற்பு அளித்து வருகின்றனர். அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறுகிறது.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அங்கு சென்று கிரிக்கெட் விளையாட இந்திய வீரர்கள் கடும் யோசனையில் ஈடுபட்டுள்ளது. இதற்கு முன் 2023ஆம் ஆண்டு ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்ற போது இந்திய அங்கு சென்று விளையாடவில்லை. மாறாக இந்தியா விளையாட்டும் ஆட்டங்கள் மட்டும் இலங்கையில் நடத்தப்பட்டன.

2023 ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியில் இலங்கையில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி இருந்தது. அதேபோல், இந்த முறையும் இந்திய விளையாடும் ஆட்டங்கள் இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்தில் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. அதேநேரம் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாடுவது குறித்து மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஒலிம்பிக்கில் 3வது பதக்கம் வெல்லும் முனைப்பில் மனு பாகெர்! தங்கம் வெல்வாரா? - Paris Olympics 2024

ABOUT THE AUTHOR

...view details