சென்னை: சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் தொடரில் இன்று நடைபெற்ற போட்டிகளில் இந்திய ஜோடிகளான இரண்டாம் நிலை வீரர் ஜீவன் நெடுஞ்செழியன் - விஜய் சுந்தர் பிரசாந்த் மற்றும் நடப்பு சாம்பியன் ராம்குமார் ராமநாதன் - சாகேத் மைனேனி ஆகியோர் அரையிறுதி போட்டிக்கு முன்னேறினர்.
இன்று நடைபெற்ற இரட்டையர் பிரிவு போட்டியில் ஜிம்பாப்வேயின் கோர்ட்னி ஜான் லாக் - ஜப்பானின் ரியோ நோகுச்சிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர்கள் நெடுஞ்செழியன் - பிரசாந்த் ஜோடி 6-2, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்றனர். இரண்டு அணிகளுக்கும் இடையே ஒரு நேரத்திற்கு மேலாக ஆட்டம் நடைப்பெற்றது.
மற்றொரு இரட்டையர் போட்டியில் கடந்த ஆண்டு பட்டத்தை வென்ற இந்திய அணியின் ராமநாதன் - மைனேனி ஜோடி வெளிநாட்டு ஜோடியான எகோர் அகஃபோனோவ் - எவ்ஜெனி டியுர்னேவ் ஆகியோரை 6-3, 6-4 என்ற நேர் செட்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றனர். நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டிகளில் இந்திய ஜோடிகள் வெற்றி பெற்றால் சனிக்கிழமை நடைப்பெறும் இறுதி போட்டியில் பங்கேற்பார்கள்.
நாளை நடைப்பெறும் அறையிறுதி போட்டியில் இந்திய ஜோடி நெடுஞ்செழியன் - பிரசாந்த் ஜப்பானிய ஜோடியான ஷின்டாரோ மோச்சிசுகி - கைட்டோ உசுகியை ஆகியோருடன் மோதுகின்றனர்.