ஹைதராபாத்:நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (பிப்ரவரி 1) காலை 11 மணிக்கு 2025-26ஆம் நிதியாண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் அறிவிப்பு ஒரு புறம் வரவேற்பை பெற்று வரும் நிலை, மறுபுறம் பீகார் தவிர வேறு மாநிலங்கள் குறித்து பெரிதாக எதுவும் அறிவிப்புகள் இல்லை என்ற கருத்தையும் பெற்று வருகிறது. இந்நிலையில் நாம் இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையை உற்று நோக்கினால் உள்நாட்டுப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் அமைந்திருப்பதை அறிய முடியும்.
உதாரணமாக, கடந்த ஆண்டு வெளியுறவு அமைச்சகத்திற்கான பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு ரூ.25,277.20 கோடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ரூ.20,516.61 கோடியாக ரூ.5,000 கோடி குறைவாக ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்ஜெட் உள்நாட்டு பொருளாதாரத்தின் வளர்ச்சியை நோக்கி இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய லண்டன் கிங்ஸ் கல்லூரியில் உள்ள கிங்ஸ் இந்தியா நிறுவனத்தின் சர்வதேச உறவுகள் பேராசிரியரும், அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் சிந்தனைக் குழுவின் துணைத் தலைவருமான (ஆய்வுகள் மற்றும் வெளியுறவுக் கொள்கை) ஹர்ஷ் வி பந்த், “இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை உள்நாட்டுப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
உள்நாட்டு பொருளாதாரத்தில் நிலையான வளர்ச்சி:
இது மிகவும் நல்ல விஷயம். உள்நாட்டு வளர்ச்சி மீது அரசு கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். உள்நாட்டு பொருளாதாரம் வலுவாக இல்லாவிட்டால், உலகளாவிய போட்டியில் ஒரு நாடு இடம் பெற முடியாது. இந்த ஆண்டின் பட்ஜெட் விவசாயம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME’s), உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
இது பாதுகாப்பு, கிராமப்புற மேம்பாடு, கல்வி, சுகாதாரம், ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைகளுக்கு குறிப்பிடத்தக்க நிதியை முன்மொழிகிறது. இது வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் இந்தியாவின் பொருளாதாரத்தை நிலையாக அதிகரிக்க செய்யும். நிதிப்பற்றாக்குறையை 4.8 சதவீதத்திலிருந்து அடுத்த நிதியாண்டில் 4.4 சதவீதமாகக் குறைக்கப்படும் எனவும் பெட்ஜெட்டில் கூறியுள்ளனர்.
நாடுகளுக்கான உதவி நிதிகள் குறைப்பு:
வெளியுறவு அமைச்சகத்தின் கீழ் அமையும் "நாடுகளுக்கான உதவி" போன்ற முக்கிய நிதிகளாக 2024-25 பட்ஜெட்டில் ரூ.5,806.48 ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதுவே இந்த ஆண்டு ரூ.5,483 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
பூட்டான்:இந்த 'நாடுகளுக்கான உதவி நிதியில்’ வழக்கம்போல், பூட்டான் மிகப்பெரிய பயனாளியாக உள்ளது. இந்த முறை, பூட்டானுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.2,150 கோடி, இது 2024-25 நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ரூ.2,543.48 கோடியை விடக் குறைவு.
நேபாளம்:கடந்த ஆண்டைப் போலவே ரூ.700 கோடி ஒதுக்கீட்டைக் கொண்ட இரண்டாவது பெரிய பயனாளி நேபாளம். 2023 ஆம் ஆண்டு நேபாளம் அதிபராக முகமது முய்சு தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து மாலத்தீவுகளுடன் இந்தியாவின் உறவு சற்று இணைக்கமாக தொடங்கியுள்ளது. அதன் விளைவாக கடந்த ஆண்டு ரூ.470 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.