இலங்கை: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த நான்காம் தேதி மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்று காங்கேசன் கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றச்சாட்டை முன்வைத்து இரண்டு விசைப்படகையும் பரிமுதல் செய்து அதிலிருந்த 23 மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (பிப்.16) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதில் 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து படகின் ஓட்டுநர்கள் இரண்டு பேருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனையும், ஒருவர் 2வது முறையாக எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து ஊர் காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை அடுத்து, ராமேஸ்வரம் மீனவர்கள் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (பிப்.17) போராட்டத்தை ஈடுபட்டது மட்டுமல்லாமல் இன்று (பிப்.18) ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் படகுகளை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதோடு தங்களுடைய படகுகளில் கருப்பு கொடி கட்டி தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவைப் புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் கிராமிய கடல் தொழில் அமைப்புகளின் சார்பில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது அவர்கள் கூறுகையில், "3500க்கும் மேற்பட்டோர் கச்சத்தீவு திருவிழாவிற்காக வருவதற்காகப் பதிவு செய்திருக்கும் நிலையில் மீனவர்கள் கைதான சம்பவத்தை வைத்து கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிப்போம் எனக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.