தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஈரான் அதிபர் தேர்தல்: பெண்கள் ஹிஜாப் அணி எதிர்ப்பு தெரிவித்தவர் வெற்றி! - Iran President election

ஈரான் அதிபர் தேர்தலில் சீர்திருத்த வேட்பாளர் மசூத் பெசெஸ்கியன் வெற்றி பெற்றார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 6, 2024, 12:39 PM IST

Etv Bharat
Iran's new president, Masoud Pezeshkian (AP Photo)

துபாய்: ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி கடந்த ஜூன் மாதம் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஜூன் 28 ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் அன்றைய தினம் வெறும் 40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின.

ஈரான் வரலாற்றில் முதல் முறையாக 40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது குறிப்பிடத்தக்கது. பதிவான வாக்குகளில் 42.5 சதவீத வாக்குகளை பெற்று சீர்திருத்த காட்சியைச் சேர்ந்த 69 வயதான ஈரான் முன்னாள் நிதி அமைச்சர் மசூத் பெசெஸ்கியன் முன்னிலையில் இருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தீவிர வலதுசாரி தலைவரான சயீது ஜலீலி 38.6 சதவீத வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தார்.

ஆனால் ஈரான் சட்டப்படி வெற்றி பெறுவதற்கு வேட்பாளர் குறைந்தது 50 சதவீத வாக்குக்கள் பெற்றிருக்க வேண்டும் என்பதால் முதல் கட்ட தேர்தலில் முதல் இரண்டு இடத்தைப் பிடித்த இருவரையும் முன்னிறுத்தி நேற்று (ஜூலை.5) இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குகள் தற்போது எண்ணப்பட்ட நிலையில் மொத்தம் 49.8 சதவீத வாக்குகள் ஏறத்தாழ 3 கோடி வாக்குகள் பதிவானது.

இதில் மசூத் பெசெஸ்கியன் 1 கோடியே 70 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை வாக்குக்குகளைப் பெற்று தேர்தலில் முன்னிலை பெற்றார். அதேநேரம் சயீது ஜலிலி 1 கோடியே 30 லட்சம் வாக்குகளுடன் பின்தங்கினார். எனவே ஈரான் அரசின் புதிய அதிபராக மசூத் பெசெஸ்கியன் பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன் நிதி அமைச்சராக பதவி வகித்த மசூத் பெசெஸ்கியன் ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதிகளை கட்டாயமாக்கப்பட்டதற்கு முற்றிலும் எதிரானவர் மசூத் பெசெஸ்கியன் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022ஆம் ஆண்டு மசூத் பெசெஸ்கியன் பெண்கள் ஹிஜாப் அணிய கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிராக குரல் எழுப்பிய பின் மறுநாள் பெரும் மக்கள் போராட்டமாக அது மாறியது குறிப்பிடத்தக்கது. பல பெண்கள் ஹிஜாப் கட்டாயத்திற்கு எதிராக குரல் எழுப்பிய நிலையில், அவர்கள் மீது கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வடகொரிய அதிபரை தொடர்ந்து புதினை சந்திக்கும் பிரதமர் மோடி! என்ன காரணம்? - PM Modi Russia Visit

ABOUT THE AUTHOR

...view details